ETV Bharat / state

முயல் வேட்டை: இருவருக்கு தலா ரூ.10,000 அபராதம்!

author img

By

Published : Apr 18, 2021, 2:14 PM IST

Updated : Apr 18, 2021, 2:38 PM IST

சேலம்: முயல் வேட்டையாடிய இருவரை வனத் துறை அலுவலர்கள் பிடித்து அவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

fine to forest hunters in salem
fine to forest hunters in salem

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜருகு மலை வனப்பகுதிகளில் முயல் வேட்டையாடிய இருவரை வனத் துறை அலுவலர்கள் பிடித்து அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் முருகன் கூறுகையில், ”நேற்றிரவு காரிப்பட்டி பிரிவு ஜருகுமலை தெற்கு பீட், ஜருகுமலை காப்பு காடு, அடிக்கரை சரக பகுதிகளில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தோம்.

அப்போது நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இருசக்கர வாகனத்தை காப்புகாட்டில் மறைத்துவைத்து காட்டு முயலை ஏர்கன்னைப் (AIRGUN) பயன்படுத்தி வேட்டையாட முயன்ற இருவரைப் பிடித்தோம்.

அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்ட இருவரும் பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (25), ரமேஷ் (28) என்பது தெரியவந்தது.

இருவர் மீதும் சேர்வராயன் தெற்கு வனச்சரக வன உயிரின குற்ற வழக்கு பதிவுசெய்யப்பட்டு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு நபர்களுக்கும், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வட மாநிலத் தொழிலாளர்கள் 40 பேருக்கு கரோனா!

Last Updated :Apr 18, 2021, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.